நீலகிரியில் காலில் அடிபட்டு திரியும் புலி - வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

நீலகிரியில் காலில் அடிபட்டு திரியும் புலி - வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை
நீலகிரியில் காலில் அடிபட்டு திரியும் புலி - வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

நீலகிரியில் காலில் காயங்களுடன் திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ளது பாட்டவயல் பகுதி. முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள இப்பகுதியில் இருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் செல்லும் சாலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புலி ஒன்று நடந்து சென்றதை வழிப்போக்கர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

அந்தப் புலி கடந்த இரண்டு தினங்களாக ஆங்காங்கே சுற்றி தரிவதை பலர் பார்த்துள்ளனர். புலி காலில் காயத்துடன் நொண்டி நடப்பதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதனால் புலி காயங்களோடு அடர் வனத்தை விட்டு வெளியேறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே புலியின் நடமாட்டத்தை கேமரா பொருத்தி கண்காணிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் புலிக்கு காயங்கள் இருப்பது உறுதியானால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com