மர ஆலை அதிபரின் மனைவியை கட்டிப்போட்டுவிட்டு 100 பவுன் நகை கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்

மர ஆலை அதிபரின் மனைவியை கட்டிப்போட்டுவிட்டு 100 பவுன் நகை கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்
மர ஆலை அதிபரின் மனைவியை கட்டிப்போட்டுவிட்டு 100 பவுன் நகை கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்

தென்காசியில் மர ஆலை அதிபரின் மனைவியை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 100 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி சம்பாத்தெருவில் வசதித்து வருபவர் ஜெயபால். இவர் மர ஆலை மற்றும் மர அரவை ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலெட்சுமி (58). ஜெயபால் வெளியூர் சென்று இருந்த நிலையில் விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று பகலில் விஜயலெட்சுமி வீட்டின் அருகில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.60 ஆயிரம் பணம் எடுத்து வந்ததாக தெரிகிறது.
அவர் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த 2 பேர் விஜயலட்சுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுத்துவர விஜயலெட்சுமி உள்ளே சென்றபோது இருவரும் விஜயலெட்சுமியை கட்டிப்போட்டு விட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டி பீரோ சாவியை எடுத்துள்ளனர்.

இதையடுத்து பீரோவை திறந்து அதிலிருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி சென்றதாகத் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தென்காசி டி. எஸ். பி. கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

மேலும், நெல்லையில் இருந்து மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com