துளிர்க்கும் நம்பிக்கை: 50 குடும்பங்களுக்கு மளிகை வழங்கிய 'உதவிடத்தான் பிறந்தோம்' குழு

துளிர்க்கும் நம்பிக்கை: 50 குடும்பங்களுக்கு மளிகை வழங்கிய 'உதவிடத்தான் பிறந்தோம்' குழு

துளிர்க்கும் நம்பிக்கை: 50 குடும்பங்களுக்கு மளிகை வழங்கிய 'உதவிடத்தான் பிறந்தோம்' குழு
Published on

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் 50 குடும்பங்களுக்கு உதவுவதற்காக மளிகைப் பொருட்களை சென்னையைச் சேர்ந்த 'உதவிடத்தான் பிறந்தோம்' என்ற குழுவினர் வழங்கியுள்ளனர்.

கொரோனா பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும், அவர்களுக்கு உதவி செய்ய முன்வருவோரையும் இணைக்கும் பாலமாக புதியதலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி இருந்து வருகிறது.

தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் உதவி கேட்டும், ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்த வண்ணமும் உள்ளனர். இந்த அறிவிப்பைப் பார்த்த சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த 'உதவிடத்தான் பிறந்தோம்' என்ற குழுவினர், தங்களால் முயன்ற உதவியை செய்ய முன்வந்துள்னர்.

கொரோனோ நேரத்தில் அதிகமானவர்கள் உணவின்றி தவித்து வரும் சூழலில், அவர்களுக்கு உதவும் வகையில் அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, சமையல் எண்ணெய், புளி, டீ தூள், சக்கரை உள்ளிட்ட 22 பொருட்களை கொண்ட 50 பைகளை 'உதவிடத்தான் பிறந்தோம்' குழுவின் ஒருங்கினைப்பாளர் விஜய் புதியதலைமுறை அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கிறார். இவற்றை உரியவர்களுக்கு வழங்கும் பணியை புதிய தலைமுறை குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையை துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சிக்காக பொருட்கள் மட்டுமின்றி ஏராளமானோர் பண உதவியும் செய்து வருகின்றனர், இதில் சென்னை முகப்பேர் பகுதிதை சேர்ந்த சிவா என்பவர் 25,000 ருபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com