சென்னை மின்சார ரயிலில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை மின்சார ரயிலில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு
சென்னை மின்சார ரயிலில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற புறநகர் விரைவு மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்து 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கீழே விழுந்து படுகாயமடைந்த மேலும் 4பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை 8.30 மணியளவில் மின்சார ரயில் புறப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தொங்கியபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. மின்சார ரயில் பழவந்தாங்கல்-பரங்கிமலை இடையே வந்து கொண்டிருந்த போது மின்கம்பத்தில் மோதி 7 பேர் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் பரங்கிமலை பகுதியில் மின்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com