மின் தடையால் உயிரிழந்த 3 பேர்

மின் தடையால் உயிரிழந்த 3 பேர்

மின் தடையால் உயிரிழந்த 3 பேர்
Published on

புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இம்மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்‌சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் ஏராளமானோர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவந்தனர். ரத்தம் சுத்திகரிப்பு பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென மின்சார தடை ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்த இன்வெட்டர் இயந்திரங்களும் இயங்கவில்லை. இதனால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த சுசிலா, அம்சா, கணேஷ் ஆகியோருக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் சுசிலா, அம்சா ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். கணேஷ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர்‌‌களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த மருத்துவர், 4 செவிலியர்கள், ஒரு தொழில் நுட்ப உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறியதோடு உயிரிழந்தவர்களின் கும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com