கொரோனா நிவாரண தொகை ரூ.4000 பெறாதவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்: அரசு

கொரோனா நிவாரண தொகை ரூ.4000 பெறாதவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்: அரசு
கொரோனா நிவாரண தொகை ரூ.4000 பெறாதவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்: அரசு

கொரோனா நிவாரண தொகையான 4000 ரூபாயை இதுவரை பெறாதவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு அறுவுறுத்தியுள்ளது.

99 சதவிகிதத்திற்கும் மேலாக குடும்ப அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மே பத்தாம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் மனுதாரர்களுக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து இன்றியமையா பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com