வீட்டில் தனியாக இருந்த இருவர் வெட்டிப் படுகொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்.. பின்னணி என்ன?

வீட்டில் தனியாக இருந்த இருவர் வெட்டிப் படுகொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்.. பின்னணி என்ன?
வீட்டில் தனியாக இருந்த இருவர் வெட்டிப் படுகொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்.. பின்னணி என்ன?

விளாத்திகுளம் அருகே மர்மமான முறையில் பெண் உள்பட இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி காவல் எல்லைக்கு உட்பட்ட பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரின் மனைவி ராஜாமணி (68). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவருக்கு திருமணமாகி புதூரில் வசித்து வருகிறார். ஒரு மகன் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அவர். இரவு பணிக்கு சென்ற நிலையில் ராஜாமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து நேற்று நள்ளிரவில் திடீரென ரத்த காயங்களுடன் ராஜாமணி அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து ஓடி வந்து அங்குள்ள தேவர் சிலை அருகே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த தனியார் பஸ் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், அதே பகுதியில் சந்தானம் என்பரது மகன் பொன்னுச்சாமி (50) என்பவர் வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு உடலையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com