தூத்துக்குடி கடலில் மிதந்த பச்சிளங் குழந்தையின் சடலம் – போலீசார் விசாரணை

தூத்துக்குடி கடலில் மிதந்த பச்சிளங் குழந்தையின் சடலம் – போலீசார் விசாரணை
தூத்துக்குடி கடலில் மிதந்த பச்சிளங் குழந்தையின் சடலம் – போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் கடலில் இறந்த நிலையில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே நடை பயிற்சிக்கென போடப்பட்டுள்ள நடைபாதைக்கு அருகே குப்பைகளுடன் சேர்ந்து பொம்மை போன்று ஒரு உருவம் மிதந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றவர்கள் அதைப்பார்த்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், பார்த்தபோது அங்கு பிறந்த சிலமணி நேரமேயான பச்சிளங் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதி தருவைகுளம் கடற்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் கடற்காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வந்து குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். அப்போதுதான் அது பெண் குழந்தை எனத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தருவைகுளம் டிஎஸ்பி பிரதாபன், உதவி ஆய்வாளர் முத்துமாரி தேவேந்திரர், கடலோர காவல் குழும ஆய்வாளர் சைரஸ் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்கு பிறகே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும். அதன்பிறகே வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com