தூத்துக்குடி: நகைக் கடையின் சுவரை துளையிட்டு 6 கிலோ வெள்ளி கொள்ளை

தூத்துக்குடி: நகைக் கடையின் சுவரை துளையிட்டு 6 கிலோ வெள்ளி கொள்ளை
தூத்துக்குடி: நகைக் கடையின் சுவரை துளையிட்டு 6 கிலோ வெள்ளி கொள்ளை

தூத்துக்குடியில் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு சுமார் 6 கிலோ வெள்ளி 2 பவுன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் சாந்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் சிதம்பரநகரில் எம்எம்எஸ் என்ற பெயரில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று அவர், இன்று காலை கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க சுவரில் துளையிட்டு கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com