தூத்துக்குடி: 23% உணவு விற்பனையாளர்கள் பாதுகாப்பு உரிமம் வாங்கவில்லை.!

தூத்துக்குடி: 23% உணவு விற்பனையாளர்கள் பாதுகாப்பு உரிமம் வாங்கவில்லை.!
தூத்துக்குடி: 23% உணவு விற்பனையாளர்கள் பாதுகாப்பு உரிமம் வாங்கவில்லை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 சதவீதம் உணவு விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் வாங்கவில்லை என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன் முதலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில்ராஜ் தொடங்கி வைத்து உணவு பாதுகாப்பு உரிமங்களை வியாபாரிகளுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ், மாவட்டத்தில் உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமத்தை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு முகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு சான்றிதழ் 77 சதவீதம் பேர் வாங்கி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் மீது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அச்சிடப்பட்ட பேப்பரில் உணவுப்பொருட்களை பேக்கிங் செய்து விற்றால் அதன் மூலம் கேன்சர் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதனை கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com