இந்த தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி: பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் கருத்து

இந்த தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி: பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் கருத்து

இந்த தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி: பூவுலகின் நண்பர்கள் வழக்கறிஞர் கருத்து
Published on

சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், தெரிவித்தார்.

சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையப்படுத்துவதை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘’அந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது’’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.


 
இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், கூறும்போது, ’’இந்த தீர்ப்பு, ஓரளவுக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றிதான். இந்த வழக்கில், ஆரம்ப கட்டத்தில் இருந்தே சட்ட நடைமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதுதான் பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிலத்தைக் கையகப்படுத்தும் முன் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம். சுற்றுச்சூழல் அனுமதி என்பது, மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டம் வந்தால் என்னென்னச் சூழலியல் பிரச்னைகள் உருவாகும் என்பது பற்றிய அறிக்கையை சுற்றுச்சூழல் அமைப்பு மக்களிடம் வழங்குவார்கள். பெருவாரியான மக்கள் அதை நிராகரித்தால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதுதான் சட்ட நடைமுறை.

இந்த அரசாணை செல்லபடியாகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் அரசு, இதை பாடமாக எடுத்துக்கொண்டு திட்டத்தை கைவிட வேண்டும். இல்லை, நடைமுறைபடுத்தியே தீருவோம் என்று அரசு நினைத்தால் அது எளிதானதாக இருக்காது. புதிய திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கும் சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும்’’ என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com