திருவேற்காடு நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருவேற்காடு நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருவேற்காடு நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு
Published on

திருவேற்காடு நகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

திருவேற்காடு நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 11, காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 6 பேர் என மொத்தம் 18 பேர்வெற்றி பெற்றனர். இவர்கள் திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் 18 பேரும் இன்று நகர்மன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது முழுமையான பெயரை கூறி பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவை நடத்தி வைத்த தேர்தல் நடத்தும் அதிகாரி ரமேஷ், நிகழ்ச்சி தொடங்கும்போதும் நிகழ்ச்சி முடியும்போதும் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை அவரே பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பது போல் நகர்மன்ற அலுவலகம் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com