திருவாரூர்: மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம்

திருவாரூர்: மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம்
திருவாரூர்: மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம்

திருத்துறைப்பூண்டி அருகே மின்கசிவு காரணமாக மூன்று கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதம் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தில் வசிக்கும் சுதா என்பவரது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீ விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் அருகே இருந்த இரண்டு வீடுகள் உட்பட மூன்று வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com