இருந்த ஒரே வீடும் போச்சு: மனநலம் பாதித்த மகளோடு அல்லல்படும் மூதாட்டி

இருந்த ஒரே வீடும் போச்சு: மனநலம் பாதித்த மகளோடு அல்லல்படும் மூதாட்டி
இருந்த ஒரே வீடும் போச்சு: மனநலம் பாதித்த மகளோடு அல்லல்படும் மூதாட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத் திருப்பாலக்குடி கிராமத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளோடு கணவனை இழந்து வாழும் மூதாட்டி, இடிந்து விழுந்த வீட்டில் வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் வசிக்கும் மாரியம்மாளுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதில், 3 மகள்களை அவர்களின் உறவினர்கள் உதவியோடு திருமணம் செய்து வைத்த நிலையில், அவருடைய கணவர் தங்கராசு இறந்து விட்டார்.

மனநலம் குன்றிய தனது கடைசி மகளோடு கடந்த 50 ஆண்டுகளாக கூரை வீட்டில் வசித்து வந்த மாரியம்மாள் கணவர் உயிரிழப்புக்கு பிறகு மிகுந்த சிரமங்களோடு அந்த கூரை வீட்டில் வசித்து வந்தார். ஆங்காங்கே சென்று சிறு சிறு வேலைகளை செய்து தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் பராமரிப்பின்றி இருந்த கூரை வீடு கடந்த சில நாட்களாக பெய்த மிக கனமழையால் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

பகல் நேரத்தில் இடிந்து விழுந்ததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தற்போது அவர்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி வருகிறார்கள். ஆகவே அரசு வீடு ஒன்று கட்டித்தர வேண்டும் என்று மாரியம்மாள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com