ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் வருத்தம் : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமா?

ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் வருத்தம் : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமா?
ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் வருத்தம் : ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமா?

திருவண்ணாமலையில் உடற்கல்வி ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ய வேண்டாமென வருத்தத்துடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை அடுத்த காட்டாம் பூண்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த சில வருடங்களாக சிவப்பிரகாசம் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அண்மையில் தமிழகம் முழுவதும் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது, சிவப்பிரகாசமும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அவரை பணிபுரியும் பள்ளியிலிருந்து, மாவட்ட கல்வித்துறை இடமாற்றம் செய்து வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தங்கள் ஆசிரியர் சிறந்தவர் என்றும், அவரை பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் மாணவ-மாணவிகள் பள்ளியின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் சென்றடைந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பக்குவமாக பேசி சமரசம் செய்தனர். அத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் வழக்கம்போல் வகுப்புகள் நடத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com