திருவண்ணாமலை தீபத் திருவிழா - பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருவண்ணாமலை தீபத் திருவிழா - பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருவண்ணாமலை தீபத் திருவிழா - பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார் 

திருவண்ணாமலை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். ஆனால் இந்தாண்டு நடைபெற உள்ள தீபத்திருவிழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் வரும் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் தீபத் திருவிழாவானது 29 ஆம் தேதி வரை நடக்கிறது. 29-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் கோயிலினுள் நடக்கும் வழக்கமான பூஜைகள் மற்றும் அபிஷேகங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவைத்தவிர திருவிழா நாட்களில் தினசரி 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களும் ஆன்லைன் மூலம் முன்அனுமதி பெறவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருவிழாவின் பத்தாம் நாளான தீபத்திருவிழாவின்போது பக்தர்கள் யாரும் கோயிலினுள் நுழையவும், மலையேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நடைபெறும் மாட வீதி உலா, தேர் திருவிழா, கடைசி மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா ஆகியவை கோயிலினுள் உள்ளேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com