\
திருத்தணி ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு –கோயில் நிர்வாகம்

திருத்தணி ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு –கோயில் நிர்வாகம்

திருத்தணி ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு –கோயில் நிர்வாகம்
Published on

இன்றுமுதல் திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பாக கூறுகையில் “ ஞானபண்டிதன் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படைத் திருத்தலமான , திருத்தணிகை மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின், வருடாந்திர உற்சவமான. 'ஆடிக்கிருத்திகை 'தெப்பத்திருவிழாவை' ஆன்லைன் மூலம் ஆன்மிக அன்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்ப இருக்கிறோம்.

பக்தர்கள் https://youtu.be/zCWfy8sfXmk எனும் YouTube அலைவரிசை மூலம்  ஆகஸ்ட் 12, 13, மற்றும்  14 -ஆம் தேதி, மாலை 5.00 மணி முதல்  திருத்தணி உற்சவமூர்த்தி கந்தக் கடவுளின், அபிஷேக, அலங்கார,  ஆராதனைகளையும்,  அதனைத் தொடர்ந்து,  'தெப்பத் திருவிழா ' எனும் அற்புத உற்சவத்தையும்,  துல்லியமான நேரலை ஒளிபரப்பு மூலம்  தங்கு தடையின்றி,  கண்டு மகிழ்ந்து  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் பேரருள் பெறலாம்” என்று தெரிவித்துள்ளது.                             

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com