திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்தது: ஆட்டோ ஓட்டுனர் பலி

திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்தது: ஆட்டோ ஓட்டுனர் பலி
திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்தது: ஆட்டோ ஓட்டுனர் பலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலைப்பாதையில் பேருந்து ஒன்று ஆட்டோ மீது கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர், தனியார் பேருந்தில் திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் பேருந்து மூலமாக மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப் பாதையின் நுழைவாயிலில் மோதி, அருகில் இருந்த ஆட்டோ மீது சாய்ந்தது. அதில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியுடன் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தால் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com