"அதிமுக மீது குதிரையேறி வெல்ல பார்க்கிறது பாஜக!"- ஈரோடு பரப்புரையில் திருமாவளவன் பேச்சு

"அதிமுக மீது குதிரையேறி வெல்ல பார்க்கிறது பாஜக!"- ஈரோடு பரப்புரையில் திருமாவளவன் பேச்சு
"அதிமுக மீது குதிரையேறி வெல்ல பார்க்கிறது பாஜக!"- ஈரோடு பரப்புரையில் திருமாவளவன் பேச்சு

“2024 மக்களவைத் தேர்தலுக்கு அச்சாணியாக ஈரோடு கிழக்கு வெற்றி இருக்க வேண்டும்” என காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பரப்புரையில் பேசியுள்ளார்.

திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், ஈரோட்டில் திருநகர் காலனி சந்திப்பு இடத்தில் இன்று பரப்பரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற வெற்றியானது சான்றிதழாக அமைய வேண்டும். அதிமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டாகவே இருக்கும். தமிழ்நாட்டில் பாஜக அதிமுக மூலம் குதிரை ஏறி ஜெயிக்கப் பார்க்கிறார்கள்.

மக்களவை தேர்தலில் மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு அச்சாணியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கோருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மக்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராக உள்ளார் நமது முதல்வர். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயர் பெற்றுள்ள நமது முதல்வருக்கு இடைத்தேர்தல் வெற்றி ஒரு நற்சான்றிதழாக இருக்க வேண்டும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வருக்கு நெருக்கமானவர், அவருடைய அன்பை பெற்றவர். இந்த தொகுதியில் வெற்றி பெற செய்தால், அவர் கேட்கும் அனைத்து திட்டங்களையும் முதல்வர் செய்து தருவார். ஈவிகேஎஸ் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். அடித்தட்டு மக்களை கண்டு கொள்ளாத மோடி அரசு, அதானி போன்ற தனியாருக்கு ஆதரவளித்து வருகிறது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com