’பேரறிவாளனை நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லவில்லையே’ - விமர்சனங்களுக்கு திருமாவளவன் பதில்

’பேரறிவாளனை நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லவில்லையே’ - விமர்சனங்களுக்கு திருமாவளவன் பதில்
’பேரறிவாளனை நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லவில்லையே’ - விமர்சனங்களுக்கு திருமாவளவன் பதில்

உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்துள்ளதால் தான் முதல்வர் அவரை ஆரத்தழுவினார் என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் சமூகத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு தமிழர்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைத்தவர் சி.பா ஆதித்தனார் என தெரிவித்தார்.



பேரறிவாளனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, உச்ச நீதிமன்றமே அவரை விடுதலை செய்துள்ளது எனவே தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிட வில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அவர் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை, சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com