தொல்.திருமாவளவன் திடீர் கைது

தொல்.திருமாவளவன் திடீர் கைது

தொல்.திருமாவளவன் திடீர் கைது
Published on

ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற வழியில் திருமாவளவன் திடீரென கைது செய்யப்பட்டார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக ராமேஷ்வரத்தில் முடிவடைகிறது. இந்த ரத யாத்திரைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, நெல்லை மாவட்டம் முழுவதும் வரும் 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரை கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை வழியாக செல்லவிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற வழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென பாறைப்பட்டியில் கைது செய்யப்பட்டார். தற்போது திருமாவளவனை வாடிப்பட்டிக்கு போலீசார் அழைத்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com