நகல் எரிப்புக்கு பதிலாக உண்ணாவிரத போராட்டம் - திருமா அறிவிப்பு

நகல் எரிப்புக்கு பதிலாக உண்ணாவிரத போராட்டம் - திருமா அறிவிப்பு

நகல் எரிப்புக்கு பதிலாக உண்ணாவிரத போராட்டம் - திருமா அறிவிப்பு
Published on

போலீஸ் அனுமதி மறுத்ததால் நீட் சட்ட நகல் எரிப்புக்கு பதிலாக 16-ந்தேதி உண்ணாவிரதம் நடைபெறுமென திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘‘நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம்’’ மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்கப்படுகிறது. ‘நீட்’ தேர்வு தொடர்பாக நடந்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அளித்துள்ள வழி காட்டுதலின் அடிப்படை யில், சட்ட நகல் எரிப்புப் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அதனையும் மீறி ஏற்கனவே அறிவித்தபடி, நமது மாணவர்கள் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். வழக்கு, கைது, சிறை என அவர்கள் சில நெருக்கடிகளைச் சந்திக்கும் சூழல் உருவாகலாம். எனவே, தற்போதைக்கு அப்போராட்டத்தைத் தவிர்ப்பதென முடிவுசெய்யப்படுகிறது.

அதே வேளையில், அதற்கு மாறாக வரும் 16-ந்தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் "உண்ணாநிலை அறப் போராட்டம்" நடைபெறு மென அறிவிக்கப்படுகிறது. முற்போக்கு மாணவர் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் மாணவர்களும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் இணைந்து இப்போராட்டத்தை வெற்றிகரமாக ஒருங்கிணைத்திட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது." என அறிக்கையில் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com