திருக்குவளை டூ நாகப்பட்டனம்: படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

திருக்குவளை டூ நாகப்பட்டனம்: படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
திருக்குவளை டூ நாகப்பட்டனம்: படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

திருக்குவளையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு ஆபத்தான முறையில் அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் தொங்கியவாறு செல்கின்றனர்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை, பாப்பாகோவில் வழியாக நாகப்பட்டினத்திற்குச் செல்லும் வழி தடத்தில் 10 நம்பர் டவுன் பேருந்து இயங்கி வருகிறது. தினந்தோறும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள், பணிக்கு செல்வோர் என நூற்றுக்கணக்கானோர் நாகப்பட்டினத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி முடிந்தும் வேலை முடிந்தும் வீட்டுக்குச் செல்வோர் இந்த பேருந்திலேயே செல்வதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு அபாயகரமான ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பேருந்தை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com