அரசு பேருந்து மேற்கூரை ஒழுகியதால் உள்ளேயே குடை பிடித்து சென்ற பயணிகள்.!

அரசு பேருந்து மேற்கூரை ஒழுகியதால் உள்ளேயே குடை பிடித்து சென்ற பயணிகள்.!

அரசு பேருந்து மேற்கூரை ஒழுகியதால் உள்ளேயே குடை பிடித்து சென்ற பயணிகள்.!
Published on

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே கொட்டும் மழையில் அரசு பேருந்தின் மேற்கூரை ஒழுகியதால், பயணிகள் பேருந்து உள்ளேயே குடை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வில்லிவலம் கிராமத்திற்கு ஆவியூர் கொளப்பாக்கம் வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கனமழை பெய்ததால் பேருந்து முழுவதும் ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே கொட்டியது. இதனால் பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல், கையில் எடுத்து வந்த குடையை பேருந்துக்குள் பிடித்து கொண்டு சென்றனர்.

திருக்கோவிலூர் அரசு போக்குவரத்து பணிமனையின் கீழ் செயல்படும் அதிகளவு பேருந்துகள் மேற்கூரை முழுவதும் உடைந்து காணப்படுவதால் புதிய பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com