திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு !

திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு !

திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு !
Published on

5 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின் மிகவும் பழைமையும் பாரம்பரியமும் வாய்ந்த திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளங்கும் பொருளுக்கோ மத்திய அரசு, புவிசார் குறியீடு வழங்குகிறது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையை பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்படுவதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் இது பார்க்கப்படுகிறது. மேலும் பாரம்பரியமாக தனித்தன்மையுடன் தயாரிக்கப்படும் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழக்கையை மேம்படுத்தியும், பாரம்பரிய கலைநயமிக்க பொருட்களின் உற்பத்தி நலிவடையாமல் இருக்கவும், போலிகளை தடுத்திடவும் மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கிறது.

இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின சந்தை மதிப்பு உயர்ந்து கலைஞர்களுக்கு நல்ல வருவாய்
ஏற்படுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பழைமை வாய்ந்த தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தஞ்சைமாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம், பட்டுப்புடவையின் பாரம்பரியமாக சோழ மன்னர்கள் காலத்திலிருந்து கலை நயத்துடன் அழகுற  கைத்தறியால் உருவாக்கப்படுவதால் மத்திய அரசு திருபுவனம் பட்டுப் புடவைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இது தொடர்பாக அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய்காந்தி கூறுகையில், “திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்களை தவிர, இனி வேறுயாராவது நேரடியாகவோ,இணையதளம் மூலமாகவோ திருபுவனம் பட்டுபுடவையை போலியாக விற்பனை செய்தால் சட்டப்படி குற்றம்.

மேலும் தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் பொம்மை,நாச்சியார் கோயில் குத்துவிளக்குக்கும் இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த நிலையில், திருபுவனம் பட்டுக்கும் புவிசார் அங்கீகாரம் கிடைத்தது, தஞ்சாவூர் கலைகளுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com