தந்தை குறித்து அவதூறு:  ஜெயக்குமார் - செல்லூர் ராஜூ இடையே கடும் வாக்குவாதம்

தந்தை குறித்து அவதூறு: ஜெயக்குமார் - செல்லூர் ராஜூ இடையே கடும் வாக்குவாதம்

தந்தை குறித்து அவதூறு: ஜெயக்குமார் - செல்லூர் ராஜூ இடையே கடும் வாக்குவாதம்
Published on

அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ இடையே இன்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தந்தை குறித்து செல்லூர் ராஜூ பேசியதாக ஆடியோ ஒன்று பொது வெளியில் வெளியான நிலையில், இதுகுறித்து கட்சி தலைமையின் கவனத்திற்கு ஜெயக்குமார் எடுத்துச் சென்றார்.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்று வரும் வேளையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டனர்.

அப்போது, தன் தந்தை குறித்து எப்படி பேசலாம் என செல்லூர் ராஜூவிடம் ஜெயக்குமார் கேட்டதையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அது தன் குரல் இல்லை என்றும் சத்தியமாக நான் அவ்வாறு பேசவில்லை என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மூத்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com