எனது மகன் தற்கொலையில் சந்தேகம்: காவலர் அருணின் தந்தை குற்றச்சாட்டு
ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் உள்ளது. இங்கு போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் அருண்ராஜ் பாதுகாப்பு பணியில் இருந்தார். திடீரென தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்டவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் காவலர் அருணின் தந்தை மலைராஜா கூறுகையில், நேற்று இரவு பணிக்குச் செல்வதற்கு முன் எனது மகன் என்னிடம் போனில் நன்றாகத்தான் பேசினார். தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை.தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறினார்.

