மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடு என்ற புகாரில் உண்மையில்லை - தமிழக அரசு விளக்கம்

மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறப்படும் புகார்களில் உண்மை இல்லையென தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக மின்வாரியத்திற்கான மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை செய்திக் குறிப்பின் மூலம் தமிழகை அரசு மறுத்துள்ளது.

tneb
tnebpt desk

அதில், மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஓரே மாதிரி விலைப்புள்ளியை குறிப்பிடுவது 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுமினிய மின்சுருளைக் கொண்ட மின் மாற்றிகளையும், தாமிர மின்சுருளைக் கொண்ட மின் மாற்றிகளையும் ஒப்பீடு செய்து குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அரசு, இருவகை மின் மாற்றிகளின் விலையும் மாறுபட்டது என்பதோடு, தரமும் ஆயுட்காலமும் வேறுவேறானது என்பதால் ஒப்பீடே தவறானது என்றும் விளக்கமளித்துள்ளது.

தமிழகம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகள் தரமானவை என்பதால் அதை மற்ற மாநிலங்கள் வாங்கும் மின் மாற்றிகளின் விலையோடு ஒப்பிட முடியாதென்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் ஒரே விலைப் புள்ளியை சமர்ப்பித்தாலும், அவை குறிப்பிட்டதை விட தோராயமாக 50 ஆயிரம் ரூபாய் வரை குறைத்தே மின்மாற்றிகள் வாங்கப்படுவதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமக அரசு எந்த நிலையிலும் முறைகேடுகளை அனுமதிக்காது என்றும் மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com