ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 500 கன அடியிலிருந்து 2 ஆயிரம் கனஅடியாக உபரி நீர் வெளியேற்றம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை அருகே இருக்கக்கூடிய கல்குவாரியில் சேகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செம்பரம்பாக்கம் அருகே இருக்கக்கூடிய சிக்கராயபுரம் கல்குவாரியில் கடந்த 2018, 19 களில் குடிநீர் எடுக்கப்பட்டது. அப்போது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகள் வறட்சி அடைந்ததால் சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக 30 கோடியில் பிரத்யேகமாக கல் குவாரியில் இருந்து ராட்சத குழாய்கள் , மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் கல் குவாரியில் இருந்து உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்து சென்னைக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதனால் கல் குவாரியில் இருந்து நீர் வேகமாக தீர்ந்து போனது.