தேனி:  பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் தைத் திருநாளை வரவேற்ற ஓபிஎஸ்

தேனி:  பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் தைத் திருநாளை வரவேற்ற ஓபிஎஸ்
தேனி:  பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் தைத் திருநாளை வரவேற்ற ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தார்.

உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள், தைத்திருநாளை வரவேற்கும் விதமாக பொங்கல் வைத்து வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு பொங்கள் வைத்து வழிபாடு செய்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

இதையடுத்து அங்கு வந்திருந்த தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு பொங்கல் வழங்கினார். இதனைத் தொடந்து தன்னை சந்திக்க வந்த கட்சியினருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com