அகதிகள் முகாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமிலுள்ள பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த பூஜாதீன் என்பவர் விபத்தில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஐந்தாம் வகுப்பு படித்துவரும் அவரது மகள் துணையாக இருந்து வந்தார். தனது தந்தைக்கு தேவையான உணவுப்பொருட்களை மருத்துவமனை எதிரில் உள்ள கடையில் வாங்கி வந்துள்ள நிலையில் அந்தக் கடையில் வேலை செய்துவந்த பெரியபட்டினம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி என்பரின் மகன் சரவணன்(20) மருத்துவமனையில் இருந்த சிறுமியிடம் திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து தனியாக அழைத்து வந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகே இருந்தவர்கள் சரவணனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை சிறையில் அடைத்தனர். அரசு மருத்துவமனையில் வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.