சென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீருக்கான பணிகள் தொடக்கம்

சென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீருக்கான பணிகள் தொடக்கம்
சென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீருக்கான பணிகள் தொடக்கம்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மேட்டூரிலிருந்து கூட்டு குடிநீர்த் திட்டக் குழாய் மூலம் பாலாற்றுக்கு வரும் நீரை, குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டது. மேலும் அதற்காக சென்னை குடிநீர் வாரியம், ரயில்வே துறை, காவிரி கூட்டு குடிநீர்த் திட்ட அதிகாரிகள் ஆ‌ய்வு நடத்தி முதற்கட்ட பணிகளை செய்தனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டையில் ராட்சத குழாய்கள் இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரிரு தினங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கி, விரைவில் நிறைவுபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நீர் கொண்டுவருவதற்கான போதிய வேகன்களை ஒதுக்கக் கோரி, குடிநீர் வாரியம் அனுப்பிய கடிதத்துக்கு, தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com