தமிழ்நாடு
ஆதனூர் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழப்பு
ஆதனூர் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் மணிவேல்(72) என்பவர் போட்டியிட்டார். இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரமணியை விட 160 வாக்குகள் வித்தியாசத்தில் மணிவேல் வெற்றி பெற்றார்.
வெற்றிக்கான சான்றிதழை பெற்றுச் சென்ற நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மணிவேல் உயிரிழந்தார். இவர், அண்ணா ஆட்சியில் பெரம்பலூர் எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது தம்பி ஆவார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.