நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்தவர் வெள்ளத்தில் சிக்கி பலி

நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்தவர் வெள்ளத்தில் சிக்கி பலி
நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்தவர் வெள்ளத்தில் சிக்கி பலி

குன்னூர் அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றவர் இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் குன்னூருக்கு சுற்றுலா வந்துள்ளார். குன்னூர் அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சியை சுற்றிப்பார்க்க சென்ற அவர், நீர்வீழ்ச்சியில் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது தண்ணீரின் வேகத்தில் தடுமாறிய அவர், வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அத்துடன் காட்டாற்று வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அவர், மீண்டு வரமுடியாமல் உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் இளைஞரின் உடலை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காட்டாற்று வெள்ளம் கொட்டுவதால், இளைஞரின் சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு, பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். சுற்றுலா வந்த இடத்தில் செல்ஃபி மோகத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com