\
வைகோ பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ்

வைகோ பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ்

வைகோ பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ்
Published on

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை YMCA மைதானத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற இருந்த விழா மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இவ்விழா வரும் செப்டம்பர் 5ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்த வைகோ, பவள விழாவில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், விழா அழைப்பிதழில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com