ராசிபுரம்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

ராசிபுரம்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு
ராசிபுரம்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் தாய் திட்டியதால் எலக்ட்ரிக்கல் வயரால் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை தேவஸ்தானம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதா (38). இவரது கணவர் ரவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், ராதா தனது 2 மகன்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது மூத்த மகன் கனிஷ்கர் (12) நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கனிஷ்கர் வீட்டில் உள்ள செல்போன் சார்ஜர் வயரை துண்டித்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதைபார்த்த தாய் ராதா கனிஷ்கரை திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ராதா ஆடு மேய்க்க வெளியே சென்ற நிலையில், தாய் திட்டிய சோகத்தில் இருந்த கனிஷ்கர் வீட்டிலிருந்த எலக்ட்ரிக்கல் வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்த ராதா மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கனிஷ்கர் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com