தமிழக அரசு கடன்வாங்கி வட்டியை கட்டி வருவதாகவும், ஒவ்வொருவருக்கும் 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் திமுக எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் வருவாய் 7 சதவிகிதம் சரிவை கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.