நவம்பர் மாதத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவு

நவம்பர் மாதத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவு
நவம்பர் மாதத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவு
வரும் நவம்பர் மாதம் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், சேர்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளவும் வாக்காளர் சிறப்பு முகாமுக்கான தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2 இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்கும் பணிகள் இந்த முகாம் மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தும் போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com