“வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது''.. ஆசிரியரை கட்டித்தழுவி மாணவிகள் கண்ணீர்..!

“வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது''.. ஆசிரியரை கட்டித்தழுவி மாணவிகள் கண்ணீர்..!
“வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது''.. ஆசிரியரை கட்டித்தழுவி மாணவிகள் கண்ணீர்..!

நாகை அருகே அரசு பள்ளி ஆசிரியையின் பணியிடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் அவரை கட்டித் தழுவி கண்ணீர்விட்டு அழுத சம்பவம் காண்போரை நெகிழ வைத்தது.

நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூரில் 1939-ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசின் கட்டுபாட்டில் இயங்கும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி இப்பள்ளியில் பணியாற்றி வரும் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் இசபெல்லா ஜூலியை, வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 

இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை இசபெல்லா ஜூலியை  மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேர்க்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன முழக்கங்களும் அப்போது எழுப்பப்பட்டது. வேறு பள்ளிக்கு போகக்கூடாது என்று பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை சூழ்ந்துகொண்டு பள்ளி குழந்தைகள் கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com