சசிகலா ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மை எரித்து போராட்டம்

சசிகலா ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மை எரித்து போராட்டம்
சசிகலா ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மை எரித்து போராட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் சசிகலா ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பில் உருவபொம்மையை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காந்தி சிலை அருகே கூடிய 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முதலமைச்சரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பேருந்து நிலையத்தின் அருகில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகலா பற்றி அவதூராக பேசியதாக பன்னீர்செல்வத்தை கண்டித்து பழனி பேருந்து நிலையம் முன்பு அதிமுக தொண்டர்கள் சிலர் அவரின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேவர் சிலை அருகில் கூடிய சசிகலா ஆதாவாளர்கள் ஒ.பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அ.தி.மு.கழக தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக பன்னீர்செல்வத்தின்மீது குற்றம்சாட்டி,பேருந்து நிலையம் முன்பு கூடி, பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com