அதிமுகவினர் இடையே கைகலப்பு: திகைத்து நின்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுகவினர் இடையே கைகலப்பு: திகைத்து நின்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுகவினர் இடையே கைகலப்பு: திகைத்து நின்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் புதூரில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவினர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூவை அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ வும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான மார்க்கண்டேயன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவும் கலை இலக்கிய அணி மாநில செயலாளருமான சின்னப்பன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.

இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் மற்றும் சின்னப்பன் ஆகியோருக்கு இடையே கூட்டத்தில் யார் முதலில் பேசுவது என்பதில் மோதல் ஏற்பட்டது. ஒரு கோஷ்டியினர் மார்க்கண்டேயனை முதலில் பேச சொல்லுங்கள் என குரல் எழுப்பினர். இரு தரப்பும் வாக்குவாதம் செய்ய ஒருக்கட்டத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதனால் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனால் இருகோஷ்டியினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com