சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்தது.
சென்னையின் குடிநீர்த் தேவைக்காகத் தெலுங்கு-கங்கா ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்குக் கிருஷ்ணா நதி நீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கூட பருவத்திற்கான 8 டிஎம்சி தண்ணீரை வழங்கத் தமிழக முதல்வர் பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதே கோரிக்கையைத் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேரில் வலியுறுத்தினர்.