ராமநாதபுரம்: ரேஷன் கடை முன்பு தரமற்ற அரிசியை கொட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ரேஷன் கடை முன்பு தரமற்ற அரிசியை கொட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ரேஷன் கடை முன்பு தரமற்ற அரிசியை கொட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தான் நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வழங்கியதால் கடை முன்பாக அரிசியை கொட்டிய பொதுமக்கள், அங்கு போராட்டம் நடத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தான் நியாய விலைக்கடையில் விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினியேந்தல், கண்ணத்தான் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக இங்கு உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அங்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்ற முறையிலும் புழு, பூச்சி, வண்டுகள் அதிக அளவில் கிடந்ததாலும் அரிசியில் துர்நாற்றம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ரேஷன் கடை முன்பாக அரிசியினை கீழே கொட்டி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு சென்றனர். பொதுமக்கள் யாரும் அரிசியை வாங்காமல் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
மக்கள் ரேஷன் கடை முன்பாக அரிசி கொட்டிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தரமற்ற முறையில் வழங்கப்பட்ட அரிசியை திரும்பப் பெற்று முறையான நல்ல அரிசி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com