வாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்

வாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்
வாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட கூட்டமைப்புகள் தமிழக எல்லை முற்றுகையிட்டு போராட்டம்.

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கன்னட கூட்டமைப்புகள் தமிழக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் அத்திப்பள்ளி பகுதியை முற்றுகையிட்டனர்‌. அப்போது மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர். அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தால் இரு மாநிலங்களுக்கு இடையேயான அனைத்து விதமான தொடர்புகளும் முற்றிலும் துண்டிக்கப்படும் என்றும் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு முழுக்காரணம் தமிழகத்தையேச் சாரும் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். 

கர்நாடக அரசு அணை கட்ட தொடங்கவில்லை என்றால் வரும் 27 ஆம் தேதி கன்னட அமைப்புகளே அணை கட்டும் ஆயத்த பணிகளை தொடங்கும் எனத் தெரிவித்த அவர், தமிழ் சினிமாவை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com