போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடக்கம்

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடக்கம்

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடக்கம்
Published on

தமிழகம் முழுவதும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி வளாகங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முதல் தவணையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 43ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மட்டும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,640 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால், தமிழ்நாடு 14ஆவது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com