“காவல்துறை அதிகாரி பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார்” -நடிகை ஸ்ருதி புகார்

“காவல்துறை அதிகாரி பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார்” -நடிகை ஸ்ருதி புகார்

“காவல்துறை அதிகாரி பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார்” -நடிகை ஸ்ருதி புகார்
Published on

நடிகை சுருதி, தன்னை பாலியல் ரீதியாக காவல்துறை அதிகாரி துன்புறுத்தியதாகவும், நிர்பயாவை போல பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் போட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகிறார். 

கடலூரை சேர்ந்த நடிகை சுருதி, சுமார் ரூ.2 கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 305 ரூபாய் மோசடி செய்ததாக வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேசன், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகிய மூன்று பேரையும் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி கோவையில் கைது செய்தனர். 

கோவையில் 4 வழக்குகளும், நாகப்பட்டிணத்தில் 2 வழக்குகளும், சென்னையில் ஒரு வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் சுருதி உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சுருதி,அவரது தாய் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேசன், சகோதரர் சுபாஷ் ஆகிய நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.  கோவை உட்பட 3 மாவட்டங்களிலும் பதிவான 7 வழக்குகளிலும் சுருதி உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சுருதி, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காவல் துறையினர் ஏழு நாட்களுக்கு காவலில் எடுத்து, விசாரிக்கும் போது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தன்னை நிர்பயாவை போல பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசி சென்று விடுவோம் எனக் கூறி மிரட்டியதாக பகிரங்கக் குற்றச்சாட்டை முன் வைத்தார். 

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட காவல்நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும், காகிதத்தை கொண்டு மறைத்து வைத்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையாளர் தன்னை அவரது ஆசைக்கு இணங்குமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளார். மேலும் இரண்டு பெண் காவலர்களும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் எனத் தெரிவித்து வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததற்காக சிலர், வேண்டுமென்றே இதுபோன்று பொய் வழக்குப் போட்டு உள்ளதாகவும், இந்த வழக்கில் கூறப்பட்டது போல எந்தப் பணமும் யாரிடமும் வாங்கவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார். தற்போது ஜாமீனில் வெளியாகி இருந்தாலும், தன்னைக் கொலை செய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டல் விடுப்பதாக சுருதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெண்கள் நல ஆணையத்திற்கு புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பெரியஅய்யாவிடம் கேட்டபோது, தற்போது புகார் எதுவும் வரவில்லை, அப்படி புகார்
வந்தால் விசாரித்து, சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com