திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் மூடல்; இன்றும் நாளையும் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு

திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் மூடல்; இன்றும் நாளையும் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு

திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் மூடல்; இன்றும் நாளையும் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு
Published on

முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலையில், இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் வரும் 10 ஆம் தேதி 4.00 மணி முதல் 24-ஆம் தேதி காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அத்தியாவசியப் பணிகள் தவிர, அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், முன்னேற்பாடுகளை செய்து கொள்ள இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com