எழுவர் விடுதலை: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம்

எழுவர் விடுதலை: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம்
எழுவர் விடுதலை: ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம்

7பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக கவர்னருக்கு உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.


இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com