\
உள்ளாட்சி தேர்தல்: அவசர வழக்காக விசாரிக்க திமுக முறையீடு

உள்ளாட்சி தேர்தல்: அவசர வழக்காக விசாரிக்க திமுக முறையீடு

உள்ளாட்சி தேர்தல்: அவசர வழக்காக விசாரிக்க திமுக முறையீடு
Published on

உள்ளாட்சி தேர்தல் குறித்த புதிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. 

ஏற்கெனவே மறுவரையறை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகவில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக முறையீடு செய்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com