திருச்சி: மீண்டும் சீட் கிடைக்காததால் முதல்வரிடம் கண்ணீர் விட்டு அழுத பெண் எம்.எல்.ஏ

திருச்சி: மீண்டும் சீட் கிடைக்காததால் முதல்வரிடம் கண்ணீர் விட்டு அழுத பெண் எம்.எல்.ஏ
திருச்சி: மீண்டும் சீட் கிடைக்காததால் முதல்வரிடம் கண்ணீர் விட்டு அழுத பெண் எம்.எல்.ஏ

அதிமுகவில் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாத மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முதல்வரை பார்த்து கண்ணீர் வடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் செல்வதற்காக நேற்றைய தினம் சென்னையிலிருந்து விமானம் மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்  காரில் திருச்சி வந்தனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும், போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வளர்மதி, தமிழக சட்டமன்ற மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ் வாகனம் மூலம் கிளம்பி சென்ற நிலையில், அவரைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமி வாகனத்தில் ஏறச் சென்றார்.

அப்போது குறுக்கிட்ட மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், முதல்வரை பார்த்து கண்ணீர் வடித்து அழத்தொடங்கினார். சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய அவர் கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர். மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பரஞ்சோதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com